தமிழகத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை முதல்வர் அறிவிப்பு-எந்தெந்த மாவட்டங்கள்?
Tomorrow School and Colleges Leave 4 Districts
Tomorrow School and Colleges Leave 4 Districts சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை முதல் வருகின்ற நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கன மழை முதல் அதிக கனமழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்திய நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை திருவள்ளூர் செங்கல்பட்டு காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இயங்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார் ,
நாளை முதல் அக்டோபர் 18ம் தேதி வரை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் வீட்டிலிருந்தபடியே பணி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
15/ 10/ 2024 அன்று சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
15/ 10 /2024 முதல் 18/ 10/2024 வரை தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிபுரிய அறிவுறுத்த வேண்டும்.