பள்ளிகளுக்கு விடுமுறை!.. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!
Minister Anbil Mahash New Announcement Oct 15
Minister Anbil Mahash New Announcement Oct 15 கனமழை எதிரொலி காரணமாக ஆறு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி நிர்வாகம் உங்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முக்கிய அறிவுறுத்தலை தற்போது வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள 3 மாவட்டங்களில் இன்று (அக்.15) மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதையடுத்து, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அதி கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கையாக விடுமுறை அறிவிக்கப்பட்டது.
எனினும், சில இடங்களில் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகள் (Online Classes) நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வரவிருக்கும் தேர்வுகளை கருத்தில் கொண்டு 10 – 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்தநிலையில் தான், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கான பள்ளி நிர்வாகங்கள் ஒத்திவைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் ஆன்லைன் வகுப்புகளை ஒத்தி வைக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.