இன்று(15/10/2024) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- எந்தெந்த மாவட்டங்கள் முழு விவரம்!..
TN School and College Leave News 15th Oct
TN School and College Leave News 15th Oct தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையமானது எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

எனவே இதனை தொடர்ந்து சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில் அதிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.
கனமழையின் முன்னெச்சரிக்கையின் காரணமாக கோவை மாவட்டத்தில் இன்று(15/10/2024) அரை நாள் மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று அக்டோபர் 15 விடுமுறை புதுவை அரசு அறிவித்துள்ளது.