கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!.. Tomorrow Public Holiday Oct 16

Baskaran R

Updated on:

Tomorrow Public Holiday Oct 16

கனமழை காரணமாக நாளை பள்ளி கல்லூரிகளுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!..

Tomorrow Public Holiday Oct 16

Tomorrow Public Holiday Oct 16 பருவமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழையானது பெய்து வருகின்ற நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு சென்னை வானிலை மையம் ரெட் அலெட்டை விடுத்துள்ளது.அதனைத் தொடர்ந்து தற்போது கனமழையின் எதிரொலியாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை 16/ 10/ 2024 விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Tomorrow Public Holiday Oct 16

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அத்தியாவசிய துறைகள் தவிர இதர அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை அக்டோபர் 16 பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக சேலம் சேலம் மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் இன்றும் நாளையும் அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமானது எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனமழை எச்சரிக்கையால் விழுப்புரம்,கள்ளக்குறிச்சி, கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை (அக்.16) விடுமுறை அறிவிப்பு

Leave a Comment