Breaking News: சற்றுமுன் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- எந்தெந்த மாவட்டங்கள்?
Tomorrow Puthucherry Karaikal Leave Oct 14
Tomorrow Puthucherry Karaikal Leave Oct 14 கனமழை எச்சரிக்கையின் காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது .அனைத்து பள்ளிகளுகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக புதுவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்க கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கன மழை வரை பெய்யும் என வானிலை ஆய்வு மையமானது எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
எனவே இதனை தொடர்ந்து சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் ஓரிரு நாள்களில் அதிக கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தி இருக்கிறார்.
சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ள காரணத்தினால் முன்னெச்சரிக்கையாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (15/10/2024) விடுமுறை- ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார்.
கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை -மாவட்ட ஆட்சியர் பழனி.
இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை அக்டோபர் 14 விடுமுறை புதுவை அரசு அறிவித்துள்ளது.