தமிழகத்தில் 10th,11th, 12th மாணவர்களுக்கான பொதுத் தேர்வு எப்போது?- பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய தகவல்!..
When TN 10th 11th 12th Public Exam Date Announced
When TN 10th 11th 12th Public Exam Date Announced தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகின்ற அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தனியார் பள்ளிகளில் 10 ,11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வானது முக்கிய தேர்வு ஆக நடத்தப்படுகிறது. இந்த பொது தேர்வுகள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

ஏனென்றால் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். பள்ளி படிப்பினை முடித்து உயர்கல்வி செல்வதற்கு பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் முக்கியத்துவம் வகிக்கிறது. அந்த வகையில் மருத்துவ படிப்பாக இருந்தாலும் பொறியியல் படிப்பாக இருந்தாலும் தலை அறிவியல் படிப்பாக இருந்தாலும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் ஆனது மிகவும் முக்கியமாக கருதப்படுகிறது.
இந்த மதிப்பெண்ணை வைத்து மாணவர்களின் எதிர்கால படிப்பானது நிர்ணயம் செய்யப்படுகிறது.
இதற்காக பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களை தயார்படுத்துவதற்காக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் விடுமுறை நாட்களிலும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது அதே போன்று 11, 12 வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி மாதத்திலும், பத்தாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு ஆனதும் மார்ச் மாத இறுதி வாரத்திலும் நடத்தப்படுவது வழக்கமாக வருகிறது,
எனவே இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டு தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையானது எப்போது வெளியாகும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்: தமிழ்நாடு முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோருடன் மேற்கொண்ட ஆலோசனையின் பேரில், அவர்களின் அறிவுறுத்தலுக்கு இணங்க, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோயம்புத்தூரில் வருகின்ற திங்கள்கிழமை அதாவது அக்டோபர் 14ம் தேதி காலை 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடுகிறார்.